என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெயில்வே அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க முடிவு - ரெயில்வே கோட்டங்களுக்கு இடமாற்றம்
Byமாலை மலர்20 Oct 2019 10:15 PM GMT (Updated: 20 Oct 2019 10:15 PM GMT)
ரெயில்வே வாரிய அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. அவர்கள் ரெயில்வே கோட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
புதுடெல்லி:
ரெயில்வே வாரியத்தில் 200 அதிகாரிகள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையை குறைக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இவர்களில், இயக்குனர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அந்தஸ்துள்ள அதிகாரிகள் 50 பேர் மண்டல ரெயில்வேக்களுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ரெயில்வே வாரியத்தில் அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க 2000-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலேயே திட்டமிடப்பட்டது. இப்போதுதான் அமல்படுத்தப்படுகிறது.
ரெயில்வே வாரியத்தில் எண்ணற்ற அதிகாரிகள் ஒரே மாதிரியான வேலையையே செய்கின்றனர். அதே சமயத்தில் மண்டல ரெயில்வேக்களின் செயல்திறனை அதிகரிக்க உயர் அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். எனவே, ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தனது முன்னுரிமை பணியாக இத்திட்டத்தை நிறைவேற்ற உள்ளார்.
ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலின் 100 நாள் செயல்திட்டத்திலும் இது இடம் பெற்றுள்ளது. 2015-ம் ஆண்டு, விவேக் டெப்ராய் கமிட்டியின் பரிந்துரைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நடவடிக்கை, ரெயில்வே அமைச்சகத்தை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைப்பதில் ஒரு தொடக்கம்தான். இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில், ரெயில்வே அமைச்சக உயர் அதிகாரிகளுடனான கூட்டத்தில், ரெயில்வே ஊழியர்கள் எண்ணிக்கையை ஆய்வு செய்யுமாறும், மிகுதியாக உள்ளவர்களை ரெயில்கள் இயக்கம் தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்துமாறும் பியூஸ் கோயல் கூறி இருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே வாரியத்தில் 200 அதிகாரிகள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையை குறைக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இவர்களில், இயக்குனர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அந்தஸ்துள்ள அதிகாரிகள் 50 பேர் மண்டல ரெயில்வேக்களுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ரெயில்வே வாரியத்தில் அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க 2000-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலேயே திட்டமிடப்பட்டது. இப்போதுதான் அமல்படுத்தப்படுகிறது.
ரெயில்வே வாரியத்தில் எண்ணற்ற அதிகாரிகள் ஒரே மாதிரியான வேலையையே செய்கின்றனர். அதே சமயத்தில் மண்டல ரெயில்வேக்களின் செயல்திறனை அதிகரிக்க உயர் அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். எனவே, ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தனது முன்னுரிமை பணியாக இத்திட்டத்தை நிறைவேற்ற உள்ளார்.
ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலின் 100 நாள் செயல்திட்டத்திலும் இது இடம் பெற்றுள்ளது. 2015-ம் ஆண்டு, விவேக் டெப்ராய் கமிட்டியின் பரிந்துரைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நடவடிக்கை, ரெயில்வே அமைச்சகத்தை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைப்பதில் ஒரு தொடக்கம்தான். இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில், ரெயில்வே அமைச்சக உயர் அதிகாரிகளுடனான கூட்டத்தில், ரெயில்வே ஊழியர்கள் எண்ணிக்கையை ஆய்வு செய்யுமாறும், மிகுதியாக உள்ளவர்களை ரெயில்கள் இயக்கம் தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்துமாறும் பியூஸ் கோயல் கூறி இருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X