search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
    X
    காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

    பொருளாதாரத்தை மேம்படுத்துங்கள், சர்க்கஸ் காட்டாதீர்கள் - மத்திய அரசை சாடிய பிரியங்கா

    பொருளாதாரத்தை மேம்படுத்துவது தான் அரசின் வேலை, சர்க்கஸ் காண்பிப்பது அல்ல என மத்திய மந்திரி பியூஷ் கோயலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
    புதுடெல்லி:

    அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜிக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்திய  நாட்டின் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருப்பதாகவும், அது உடனடியாக சீரடையும் என உறுதி கூற முடியாது என்றும் அபிஜித் பானர்ஜி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். 

    இதையடுத்து, புனே நகரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய மந்திரி பியூஸ் கோயல், அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர் என விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியின் வறுமை ஒழிப்பு திட்டமான ‘நியாய்’ திட்டத்தை பானர்ஜி ஆதரித்ததாக கூறிய பியூஸ் கோயல், அவரது இந்த சித்தாந்தத்தை இந்திய மக்கள் நிராகரித்து விட்டதாகவும் கூறினார்.

    இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரிக்கு பதிலடி கொடுத்துள்ளார். ‘பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி உள்ளது. அதை மேம்படுத்துவதே மத்திய அரசின் வேலை, காமெடி சர்க்கஸ் காண்பிப்பது அல்ல’ என பிரியங்கா காந்தி சாடியுள்ளார். 

    அபிஜித் பானர்ஜி தனது பணியை நேர்மையாக செய்ததால் நோபல் பரிசிற்கு தகுதியானவராக அறிவிக்கப்பட்டார். பாஜக தலைவர்கள் தங்களது வேலையை செய்வதற்கு பதிலாக மற்றவர்களின் சாதனைகளை மறைப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர் எனவும் பிரியிங்கா தெரிவித்தார்.

    மேலும், செப்டம்பர் மாதத்தில் வாகனத் துறையின் மந்தநிலை தொடர்ந்ததாகக் கூறும் ஒரு ஊடக அறிக்கையையும் அவர் குறிப்பிட்டார்.

    Next Story
    ×