search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்லேஷ் திவாரி
    X
    கம்லேஷ் திவாரி

    உ.பி.யில் துணிகரம் - இந்துமகா சபா தலைவர் சுட்டுக் கொலை

    உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இந்துமகா சபை தலைவர் கம்லேஷ் திவாரி அவரது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோவில் இந்துமகா சபை என்ற அமைப்பின் தலைவராக இருந்தவர் கம்லேஷ் திவாரி.

    இன்று மதியம் குர்ஷிதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் திடீரென நுழைந்த மர்ம நபர்கள் சிலர் திவாரியை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பைசாபாத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர் என்பது நினைவிருக்கலாம்.
    Next Story
    ×