என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன்மோகன் சிங் ஆட்சியில் பொதுத்துறை வங்கிகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன - நிர்மலா சீதாராமன்
Byமாலை மலர்16 Oct 2019 10:41 AM GMT (Updated: 16 Oct 2019 11:05 AM GMT)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் காலத்தில் பொதுத்துறை வங்கிகள் மோசமான நிலையில் இருந்தன என மத்திய மந்திரி சீதாராமன் கூறியுள்ளார்.
நியூயார்க்:
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில், இந்திய பொருளாதார கொள்கைகள் குறித்த விரிவுரை நிகழ்வு நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
இந்திய பொத்துத்துறை வங்கிகள் அனைத்தும் தற்போது நிலைத்தன்மையோடு செயல்படுகின்றன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் இந்திய பொருளாதாரம் அனைத்தும் நடுநிலையில் தான் இருந்தது. அந்நேரத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனை நான் பாராட்டுகிறேன், ஆனால் அவர்களது கூட்டமைப்பில் பொதுத்துறை வங்கிகள் மிக மோசமான நிலையில் இருந்தன.
ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த காலத்தில்தான் முக்கிய தலைவர்களுக்கு, தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் மட்டுமே கடன்கள் வழங்கப்பட்டன. அந்த முறையில் இருந்து பொதுத்துறை வங்கிகள் வெளியேற அரசின் நடுநிலைதன்மையை உள்வாங்க வேண்டிய நிலையில் உள்ளது.
சமீபத்தில் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய ரகுராம் ராஜன், மோடி அரசாங்கம் பொருளாதாரத்தில் சிறப்பாக செயல்படவில்லை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடைவதில் மோடி அரசிற்கு தெளிவான பார்வை இல்லை என கூறினார்.
ஆனால் மன்மோகன் சிங் ஆட்சியில் அதே தெளிவான பார்வை இருந்தது. அதனால் தான் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த காலத்தில் பொத்துறை வங்கிக் கடன்களில் பெரும் சிக்கல்கள் இருந்தன.
நான் யாரையும் குறைகூறும் நோக்கில் பேசவில்லை. ஆனால் ரகுராம் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர் வருத்தப்படுவார். மன்மோகன் சிங் மற்றும் ரகுராம் ராஜன் கூட்டமைப்பில் பொத்துறை வங்கிகள் மிகப்பெரிய சிக்கல்களை சந்தித்தன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா, பேராசிரியரும் பிரபல பொருளாதார நிபுணருமான ஜெகதீஷ் பகவதி மற்றும் நியூயார்க்கில் உள்ள இந்தியாவின் துணைத் தூதர் சந்தீப் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X