என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பசிக்கொடுமையில் பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது இந்தியா
Byமாலை மலர்16 Oct 2019 10:27 AM GMT (Updated: 16 Oct 2019 10:27 AM GMT)
உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான குறியீட்டில் இந்தியாவுக்கு 102-வது இடம் எனவும், பாகிஸ்தான், நேபாளம், வங்காள தேசத்தை விட பின்தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
உலகளாவிய பசி குறியீடு பட்டியல் அண்மையில் வெளியாகி உள்ளது. உலக அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் வாடுபவர்களை கணக்கெடுத்து அதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பசி குறியிடு பட்டியலின்படி, இந்தியா பசிக்கொடுமை பிரச்சினையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
117 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம் நாடுகளை விட பின்தங்கிய நிலையில் இந்தியா உள்ளது.
2000-ஆம் ஆண்டில், 113 நாடுகள் கொண்ட பசி குறியீடு பட்டியலில் இந்தியா 83-வது இடத்தைப் பிடித்திருந்தது. இப்போது, 117 நாடுகள் பட்டியலில் உள்ள நிலையில், இந்தியா 102-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
பெலாரஸ், உக்ரைன், துருக்கி, கியூபா மற்றும் குவைத் உள்ளிட்ட பதினேழு நாடுகள் ஐந்துக்கும் குறைவான குறியீட்டெண்களுடன் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன, என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X