search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான கார்
    X
    விபத்துக்குள்ளான கார்

    பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - உத்தரகாண்டில் பரிதாபம்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து லக்ஹமண்டல் பகுதி நோக்கி இன்று ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பயணித்தனர்.

    நனிபக் என்ற இடத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியை கடந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை கார் இழந்து யமுனை ஆற்றின் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரு வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் விபத்தில் காயமடைந்த இருவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×