என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு
Byமாலை மலர்15 Oct 2019 10:40 AM GMT (Updated: 15 Oct 2019 10:40 AM GMT)
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதான ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் 21-ம் தேதி கைது செய்தது.
அவரை காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் டெல்லி ஐகோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டன. அவரது நீதிமன்ற காவலை வரும் 17-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இதற்கிடையே ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, ரிஸ்கேஷ்ராய் ஆகியோரை கொண்ட பெஞ்ச், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சி.பி.ஐ. பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது சிதம்பரம் தரப்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியங்களை கலைக்கமாட்டார் எனக் கூறமுடியாது என யூகத்தின் அடிப்படையில் டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்தது.
சாட்சியங்களை ப.சிதம்பரம் கலைத்துவிடுவார் என்றால், சாட்சியங்களை பாதுகாக்க சிபிஐ என்ன செய்தது?. ஜாமீன் வழங்கக் கூடாது என்பதற்காகவே, சாட்சியங்களை ப.சிதம்பரம் கலைத்துவிடுவார் எனக் கூறப்படுகிறது. ப.சிதம்பரத்தை சிபிஐ அடர்ந்த வனத்தில் வைத்து கைது செய்யவில்லை, மாறாக அவரது வீட்டில் வைத்துதான் கைது செய்தது என வாதிட்டார்.
ப.சிதம்பரம் தரப்பு தரப்பு வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட், மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X