என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் எந்த பிரச்சினையும் இல்லை -பியூஷ் கோயல்
Byமாலை மலர்15 Oct 2019 9:49 AM GMT (Updated: 15 Oct 2019 9:49 AM GMT)
அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் எந்த பிரச்சினையும் இல்லை என்று இந்திய வர்த்தகத் துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
புதுடெல்லியில் உள்ள இந்திய ஆற்றல் மன்றத்தில் வர்த்தகத் துறை மந்திரி பியூஷ் கோயல் பேசியதாவது:-
அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அமெரிக்காவுடனான உறவுகளில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. எந்தவொரு உறவிலும் ஒரு சிறிய நிச்சயமற்ற தன்மை இருப்பது ஆரோக்கியமான இருதரப்பு உறவுக்கு நல்லது.
ஆனால், இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான பெரும் சாத்தியங்கள் உள்ளன. அதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை.
பொருளாதார மந்தநிலையை பொருத்தவரையில், இந்த கட்டமைப்பு மாற்றங்களுடன் இந்திய பொருளாதாரம் சிறப்பாக செயல்பட முடியும். கடந்த இரண்டு காலாண்டுகளைத் தவிர ஐந்து ஆண்டுகளாக உள்நாட்டு பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிதியாண்டில், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X