என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ப. சிதம்பரம் மீண்டும் கைதா? டெல்லி நீதிமன்றம் நாளை தீர்ப்பு
Byமாலை மலர்14 Oct 2019 12:30 PM GMT (Updated: 14 Oct 2019 12:49 PM GMT)
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று முடிவடைந்த நிலையில் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி :
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர்.
இந்த வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. திகார் சிறையில் இருந்து காவலர்கள் ப.சிதம்பரத்தை வாகனத்தில் ஏற்றி கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.
ப. சிதம்பரம் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் இதே வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்ததைதான் தாங்கள் விசாரிக்கப்போவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். விசாரித்து முடித்த ஒரே விவகாரத்தை மீண்டும் விசாரிக்க காவலில் எடுக்க வேண்டும் என்கிறார்கள். இதை நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது என வாதிட்டார்.
ஒரே வழக்கில் ஒரே சம்பவத்தில் இரு முறை கைது செய்யக்கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அமலாக்கத்துறை வக்கீல் துஷார் மேத்தா இந்த வழக்கில் நடைபெற்ற பணப்பரிமாற்றங்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்து ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X