என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது- ஆயுதங்கள் பறிமுதல்
Byமாலை மலர்14 Oct 2019 7:50 AM GMT (Updated: 14 Oct 2019 7:50 AM GMT)
காஷ்மீரில் 13 நாள் தேடுதலுக்கு பிறகு கந்தர்பால் பகுதியில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் இன்று கைது செய்தனர். இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த பகுதியை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி முற்றுகையிட்டனர்.
இதில் 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். மற்ற பயங்கரவாதிகள் தப்பி சென்றனர். அவர்களை பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் 13 நாள் தேடுதலுக்கு பிறகு கந்தர்பால் பகுதியில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் இன்று கைது செய்தனர். இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான இரு பயங்கரவாதிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X