search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காந்திஜி
    X
    காந்திஜி

    காந்திஜி எப்படி தற்கொலை செய்து கொண்டார்?: மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கேள்வி

    குஜராத் தனியார் பள்ளிகள் நடத்திய உள் மதிப்பீட்டு தேர்வில் காந்திஜி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? எனக் கேள்வி கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் காந்திநகரில் சஃபலாம் ஷலா விகாஷ் சங்குல் என்ற அமைப்பு பல தனியார் பள்ளிகளை நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நேற்று உள்மதிப்பீட்டு தேர்வு நடைபெற்றது.

    அப்போது 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாளில்காந்திஜி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? எனக் கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வியை படித்து பார்த்ததும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இந்த விவகாரம் மாவட்ட கல்வி அதிகாரிகள் வரை சென்றது.

    இதுகுறித்து செய்தி அறிந்ததும், கேள்வித்தாளை தயாரித்த பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி  தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து காந்திநகர் மாவட்ட கல்வி அதிகாரி பரத் வதேர் கூறுகையில் ‘‘அந்த அமைப்பின் கீழ் இயங்கும் ஏராளமான பள்ளிகளில் நடத்தப்பட்ட தேர்வில் இந்தக் கேள்வி இடம் பிடித்துள்ளது. இந்த கேள்வி முற்றிலும் ஆட்சேபனைக்குரியது. நாங்கள் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளோம். அறிக்கை வந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

    மேலும் 12-ம் வகுப்பிற்கான கேள்வித்தாளில் உங்கள் பகுதியில் மது விற்பனை அதிகரித்து வருவது மற்றும் சட்டவிரோத செயல்களால் படும் துன்பம் குறித்து மாவட்ட காவல் தலைமைக்கு புகார் கடிதம் எழுதுக, எனக் கேட்கப்பட்டிருந்தது.

    குஜராத் மாநிலத்தில் மது விற்பனை கிடையாது. ஆனால், மது விற்பனை அதிகரித்து வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×