என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப்பில் தென்பட்ட ஆளில்லா விமானங்கள்
Byமாலை மலர்8 Oct 2019 10:48 PM GMT (Updated: 8 Oct 2019 10:48 PM GMT)
பஞ்சாப்பில் கடந்த மாதம் ஆளில்லா விமானங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 2 ஆளில்லா விமானங்கள் தென்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.
பெரோஸ்பூர்:
பஞ்சாப் மாநிலத்தில் ஆயுதங்களை போட ஆளில்லா விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுபோன்று பயன்படுத்தப்பட்ட 2 ஆளில்லா விமானங்கள் கடந்த மாதம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று மேலும் 2 ஆளில்லா விமானங்கள் தென்பட்டன. அவற்றை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்தனர்.
முதலில், ஒரு விமானம், பாகிஸ்தான் பகுதியிலேயே 4 தடவை கண்ணில் பட்டது. மற்றொரு தடவை, இந்திய பகுதிக்குள் ஏறத்தாழ ஒரு கி.மீ. தூரம்வரை தென்பட்டது. இரண்டாவது விமானம், பாகிஸ்தான் பகுதியில் பஸ்டி ராம்லால் எல்லைப்புற காவல் நிலையம் அருகே காணப்பட்டது. 2 விமானங்களும் திரும்பிச் செல்லும்போது, விளக்குகளை அணைத்து விட்டு சென்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டன. இதுபோன்ற விமானங்களை கண்டால் தகவல் அளிக்குமாறு எல்லைப்புற மக்களை பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தி உள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆயுதங்களை போட ஆளில்லா விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுபோன்று பயன்படுத்தப்பட்ட 2 ஆளில்லா விமானங்கள் கடந்த மாதம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று மேலும் 2 ஆளில்லா விமானங்கள் தென்பட்டன. அவற்றை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்தனர்.
முதலில், ஒரு விமானம், பாகிஸ்தான் பகுதியிலேயே 4 தடவை கண்ணில் பட்டது. மற்றொரு தடவை, இந்திய பகுதிக்குள் ஏறத்தாழ ஒரு கி.மீ. தூரம்வரை தென்பட்டது. இரண்டாவது விமானம், பாகிஸ்தான் பகுதியில் பஸ்டி ராம்லால் எல்லைப்புற காவல் நிலையம் அருகே காணப்பட்டது. 2 விமானங்களும் திரும்பிச் செல்லும்போது, விளக்குகளை அணைத்து விட்டு சென்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டன. இதுபோன்ற விமானங்களை கண்டால் தகவல் அளிக்குமாறு எல்லைப்புற மக்களை பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X