search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்எஸ்எஸ் விஜயதசமி விழாவில் பங்கேற்ற ஷிவ் நாடார்
    X
    ஆர்எஸ்எஸ் விஜயதசமி விழாவில் பங்கேற்ற ஷிவ் நாடார்

    ஆர்எஸ்எஸ் விஜயதசமி விழா- முதன்மை விருந்தினராக எச்.சி.எல். நிறுவனர் பங்கேற்பு

    ஆர்எஸ்எஸ் சார்பில் நாக்பூரில் இன்று நடந்த விஜயதசமி விழாவில் முதன்மை விருந்தினராக எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் பங்கேற்றார்.
    நாக்பூர்:

    ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி மற்றும் தசராவை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் முக்கிய தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகின்றனர். இந்த விழாக்களில் நிகழ்த்தப்படும் உரை உன்னிப்பாக கவனிக்கப்படும்.

    அவ்வகையில் இந்த ஆண்டு விஜயதசமி விழா மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் முக்கிய விருந்தினராக பங்கேற்றார். ஆர்எஸ்எஸ் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு பேரணியை அவர் பார்வையிட்டார்.

    ஆர்எஸ்எஸ் பேரணி

    விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி, முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×