என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூலான் தேவியின் தங்கை சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்
Byமாலை மலர்6 Oct 2019 12:48 PM GMT (Updated: 6 Oct 2019 12:48 PM GMT)
டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைகூட்ட தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான பூலான் தேவியின் தங்கை இன்று சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் மிகப்பெரிய வழிப்பறி கொள்ளை கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திவந்த பூலான் தேவி கடந்த 1983-ம் ஆண்டு போலீசில் சரண் அடைந்து சிறைக்கு சென்றார்.
தண்டனை காலம் முடிந்து விடுதலையான இவர் 1996-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மிர்சாபூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 25-7-2011 அன்று டெல்லியில் உள்ள வீட்டில் மர்மநபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு முன்னதாக, தன்னை கூட்டாக சேர்ந்து கற்பழித்த ராஜபுத்திர இனத்தை சேர்ந்த 21 பேர் கொண்ட கும்பலை 1981-ம் ஆண்டில் தனது கூட்டாளிகள் துணையுடன் கான்பூர் தெஹத் மாவட்டத்தில் பூலான் தேவி சுட்டுக் கொன்றார்.
இந்நிலையில், லக்னோ நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உ.பி.முன்னாள் முதல் மந்திரியும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் முன்னிலையில் மறைந்த பூலான் தேவியின் தங்கை ருக்மனி தேவி நிஷத் இன்று சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் மிகப்பெரிய வழிப்பறி கொள்ளை கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திவந்த பூலான் தேவி கடந்த 1983-ம் ஆண்டு போலீசில் சரண் அடைந்து சிறைக்கு சென்றார்.
தண்டனை காலம் முடிந்து விடுதலையான இவர் 1996-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மிர்சாபூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 25-7-2011 அன்று டெல்லியில் உள்ள வீட்டில் மர்மநபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு முன்னதாக, தன்னை கூட்டாக சேர்ந்து கற்பழித்த ராஜபுத்திர இனத்தை சேர்ந்த 21 பேர் கொண்ட கும்பலை 1981-ம் ஆண்டில் தனது கூட்டாளிகள் துணையுடன் கான்பூர் தெஹத் மாவட்டத்தில் பூலான் தேவி சுட்டுக் கொன்றார்.
இந்நிலையில், லக்னோ நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உ.பி.முன்னாள் முதல் மந்திரியும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் முன்னிலையில் மறைந்த பூலான் தேவியின் தங்கை ருக்மனி தேவி நிஷத் இன்று சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X