search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒப்பந்தங்கள் கையொப்பமானபோது எடுத்தப் படம்
    X
    ஒப்பந்தங்கள் கையொப்பமானபோது எடுத்தப் படம்

    இந்தியா-வங்காளதேசம் இடையே 7 புதிய ஒப்பந்தங்கள் - எரிவாயு இறக்குமதி திட்டம் தொடக்கம்

    வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா முன்னிலையில் இன்று 7 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்தியாவுக்கு எரிவாயு இறக்குமதி உள்ளிட்ட திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்.
    புதுடெல்லி:

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

    வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா முன்னிலையில் இன்று 7 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்தியாவுக்கு பெட்ரோலிய எரிவாயு இறக்குமதி செய்வது உள்ளிட்ட மூன்று திட்டங்களை பிரதமர் மோடியும் ஷேக் ஹசினாவும் தொடங்கி வைத்தனர்.

    புதிய திட்டங்களை தொடங்கி வைத்த ஷேக் ஹசினா - பிரதமர் மோடி

    இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்குமான நல்லுறவு அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி இந்த நல்லுறவு இருநாட்டு மக்களும் பயனடையும் வகையில் அமைந்துள்ளதாக கூறினார்.

    கடந்த ஓராண்டு காலத்தில் இருநாடுகளுக்கு இடையில் 9 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இன்று தொடங்கப்பட்ட திட்டங்களுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    Next Story
    ×