search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி - சந்திரசேகர ராவ் சந்திப்பு
    X
    பிரதமர் மோடி - சந்திரசேகர ராவ் சந்திப்பு

    பிரதமர் மோடி- தெலுங்கானா முதல்மந்திரி சந்திரசேகர ராவ் சந்திப்பு

    பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்மந்திரி சந்திரசேகர ராவ் இன்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா மாநில முதல் மந்திரியுமானவர் சந்திரசேகர ராவ். இவர் பிரதமர் மோடியை இன்று புதுடெல்லியில் சந்தித்தார்.

    இந்த சந்திப்பின் போது, தெலுங்கானாவில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்தல், மாநில வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்குதல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

    மேலும், தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறவிருக்கும் நகராட்சி தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு பாஜக ஆதரவு தர வேண்டும் என பிரதமர் மோடியிடம் சந்திரசேகர ராவ் வேண்டுகோள் விடுத்தார்.

    இதற்கு முன்னதாக, சந்திரசேகர ராவ் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×