என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வயநாட்டுக்கு 4-ந்தேதி ராகுல் காந்தி வருகை
Byமாலை மலர்2 Oct 2019 2:45 PM GMT (Updated: 2 Oct 2019 2:45 PM GMT)
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற 4-ந்தேதி வயநாடு செல்கிறார். அங்கு தொகுதி மக்களை சந்தித்து பேசுகிறார்.
திருவனந்தபுரம்:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யாக இருக்கும் ராகுல்காந்தி தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு அடிக்கடி வயநாடு சென்று தொகுதி மக்களை சந்தித்து வருகிறார். கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போதும் வயநாடு சென்று 4 நாட்கள் தங்கியிருந்து நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டார்.
இந்த நிலையில் வயநாடு பகுதியில் பந்திபூர் சரணாலய தேசிய நெடுஞ்சாலையை இரவு நேரத்திலும் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது.
இது பற்றி ராகுல்காந்தி கேரள முதல்-மந்திரியை சந்தித்து தொகுதி மக்களின் கோரிக்கை குறித்து மனு கொடுத்தார். மேலும் அவர், தொகுதி மக்களை சந்திக்க வருகிற 4-ந்தேதி வயநாடு வருகிறார். இதனை ராகுல்காந்தியே தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X