என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டில் நடப்பவற்றை பார்த்தால் காந்தியின் ஆன்மா வேதனைப்படும் - சோனியா காந்தி
Byமாலை மலர்2 Oct 2019 8:50 AM GMT (Updated: 2 Oct 2019 10:20 AM GMT)
இந்தியாவில் சில ஆண்டுகளாக நடப்பவற்றை பார்த்தால் காந்தியின் ஆன்மா வேதனைப்படும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ராஜ்காட் பகுதியில் கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் காந்தியின் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் கடைபிடித்து வாழ்வோம் என்று சோனியா காந்தி முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர்.
அவர்களிடையே இந்தியில் பேசிய சோனியா காந்தி, இந்தியாவில் சில ஆண்டுகளாக நடப்பவற்றை பார்த்தால் காந்தியின் ஆன்மா வேதனைப்படும் என வருத்தத்துடன் தெரிவித்தார்.
'காந்தியும் இந்தியாவும் ஒருமித்து ஒருங்கிணைந்த ஒன்றாகும். காந்தியால் தான் இந்தியா இன்றைய நிலைக்கு வந்துள்ளது. ஆனால், சிலர் இந்தியாவுடன் ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என கருதுகின்றனர்.
யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை. காங்கிரஸ் கட்சி மட்டும்தான் காந்தியின் பாதையை பின்பற்றி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு தேவையான வசதிகள் ஆகியவற்றை செய்து தந்துள்ளது.
தங்களை மிகவும் உயர்வானவர்கள் என்று கருதிக்கொள்பவர்கள் மகாத்மா காந்தியின் தியாகங்களை எப்படி புரிந்து கொள்வார்கள்? பொய்களை அடிப்படையாக வைத்து அரசியல் செய்பவர்களுக்கு காந்தியின் அகிம்சை தத்துவம் புரியாது’ எனவும் சோனியா கூறினார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லியில் நடைபெற்ற பேரணிகளில் பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர். ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அவர்களிடையே இந்தியில் பேசிய சோனியா காந்தி, இந்தியாவில் சில ஆண்டுகளாக நடப்பவற்றை பார்த்தால் காந்தியின் ஆன்மா வேதனைப்படும் என வருத்தத்துடன் தெரிவித்தார்.
'காந்தியும் இந்தியாவும் ஒருமித்து ஒருங்கிணைந்த ஒன்றாகும். காந்தியால் தான் இந்தியா இன்றைய நிலைக்கு வந்துள்ளது. ஆனால், சிலர் இந்தியாவுடன் ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என கருதுகின்றனர்.
யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை. காங்கிரஸ் கட்சி மட்டும்தான் காந்தியின் பாதையை பின்பற்றி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு தேவையான வசதிகள் ஆகியவற்றை செய்து தந்துள்ளது.
தங்களை மிகவும் உயர்வானவர்கள் என்று கருதிக்கொள்பவர்கள் மகாத்மா காந்தியின் தியாகங்களை எப்படி புரிந்து கொள்வார்கள்? பொய்களை அடிப்படையாக வைத்து அரசியல் செய்பவர்களுக்கு காந்தியின் அகிம்சை தத்துவம் புரியாது’ எனவும் சோனியா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X