என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாத்மா காந்தி பிறந்தநாள் பேரணி- அமித் ஷா, ராகுல் காந்தி பங்கேற்பு
Byமாலை மலர்2 Oct 2019 6:42 AM GMT (Updated: 2 Oct 2019 10:07 AM GMT)
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் நடைபெற்ற பேரணிகளில் பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
புதுடெல்லி:
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது காந்தியின் 150வது பிறந்ததினம் என்பதால் அரசு சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இதேபோல் மகாத்மா காந்தியின் தூய்மை கனவை நிறைவேற்றும் வகையில், ஆங்காங்கே சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்றன. இதில், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் என பலர் பங்கேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் அறிவிப்பை மோடி வெளியிடுவார்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது காந்தியின் 150வது பிறந்ததினம் என்பதால் அரசு சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
டெல்லியில் காந்தியடிகள் பிறந்த தினத்தை முன்னிட்டு காந்தியின் கொள்கைகளை பரப்பும் வகையில் பாஜக சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மற்றொரு இடத்தில் பேரணி நடைபெற்றது.
இதேபோல் மகாத்மா காந்தியின் தூய்மை கனவை நிறைவேற்றும் வகையில், ஆங்காங்கே சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்றன. இதில், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் என பலர் பங்கேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் அறிவிப்பை மோடி வெளியிடுவார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X