என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியானா முதல்-மந்திரிக்கு ரூ.1.27 கோடி சொத்து- வேட்புமனுவில் தகவல்
Byமாலை மலர்2 Oct 2019 6:30 AM GMT (Updated: 2 Oct 2019 6:30 AM GMT)
அரியானா முதல்-மந்திரி மனோ கர்லால் கட்டாருக்கு ரூ.1.27 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகார்:
அரியானாவில் மனோ கர்லால் கட்டார் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. 90 தொகுதிகளை கொண்ட இங்கு வருகிற 21-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
அதை தொடர்ந்து பா.ஜனதா முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 78 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் கர்னால் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அரியானா மாநில பா.ஜனதா தலைவர் பொஷ்பராலா, தோஹானா தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப்சிங் பெஷோ வா தொகுதியிலும், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர்தத் பரோடா தொகுதியிலும், மல்யுத்த வீராங்கனை படாதர் போகத் தாத்ரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் கர்னால் தொகுதியில் போட்டியிடும் முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதில் தனது சொத்து மதிப்பு ரூ.1.27 கோடி என குறிப்பிட்டுள்ளார். இவற்றில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.94 லட்சம் என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.33 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாருக்கு ரோதக்கில் உள்ள தனது சொந்த கிராமமான பின்யானியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பண்ணை நிலம் உள்ளது. அதே கிராமத்தில் 800 சதுர அடி அளவில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கையிருப்பு தொகையாக ரூ.15 ஆயிரம் மட்டுமே இருப்பதாக வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முதல்-மந்திரி கட்டாருக்கு சொந்த வாகனம் எதுவும் இல்லை.
அவரது வேட்புமனு தாக்கலின்போது உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் உடன் இருந்தனர்.
அரியானாவில் மனோ கர்லால் கட்டார் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. 90 தொகுதிகளை கொண்ட இங்கு வருகிற 21-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
அதை தொடர்ந்து பா.ஜனதா முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 78 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் கர்னால் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அரியானா மாநில பா.ஜனதா தலைவர் பொஷ்பராலா, தோஹானா தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப்சிங் பெஷோ வா தொகுதியிலும், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர்தத் பரோடா தொகுதியிலும், மல்யுத்த வீராங்கனை படாதர் போகத் தாத்ரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் கர்னால் தொகுதியில் போட்டியிடும் முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதில் தனது சொத்து மதிப்பு ரூ.1.27 கோடி என குறிப்பிட்டுள்ளார். இவற்றில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.94 லட்சம் என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.33 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாருக்கு ரோதக்கில் உள்ள தனது சொந்த கிராமமான பின்யானியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பண்ணை நிலம் உள்ளது. அதே கிராமத்தில் 800 சதுர அடி அளவில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கையிருப்பு தொகையாக ரூ.15 ஆயிரம் மட்டுமே இருப்பதாக வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முதல்-மந்திரி கட்டாருக்கு சொந்த வாகனம் எதுவும் இல்லை.
அவரது வேட்புமனு தாக்கலின்போது உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X