என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்- மம்தா பானர்ஜி சந்திப்பு
Byமாலை மலர்30 Sep 2019 4:58 PM GMT (Updated: 30 Sep 2019 4:58 PM GMT)
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கொல்கத்தா:
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி பல்கலைகழக்கத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஜார்க்கண்ட் பயணத்தை முடித்துக்கொண்ட குடியரசு தலைவர் அங்கிருந்து மேற்கு வங்காள மாநிலம் சென்றார்.
மேற்கு வங்காளம் சென்ற குடியரசு தலைவர் கொல்கத்தாவில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மம்தா பானர்ஜியுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
வடமாநிலங்களில் புதிய குடியுரிமை பட்டியல் கணக்கெடுப்பு, சாரதா நிதி நிறுவன மோசடி போன்ற விவகாரங்களில் மத்திய அரசுடன் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மோதல் போக்கை கடைபிடித்துவரும் நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடனான இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X