search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு
    X
    பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்துக்குட்பட்ட பால்கோட் பகுதியில் உள்ள இந்திய கண்காணிப்பு நிலைகள் மற்றும் கிராமங்களின்மீது இன்று பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர்.
    ஜம்மு:

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.

    கிராமங்கள் மீது துப்பாக்கிச் சூடு

    இந்த ஆண்டிலும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதுவரை 2050-க்கும் அதிகமான முறை பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் நமது தரப்பில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய கண்காணிப்பு நிலைகளையும் அருகாமையில் உள்ள கிராமங்களையும் நோக்கி பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

    இன்று மாலை சுமார் 4 மணியளவில் நடந்த இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தி தகுந்த பதிலடி கொடுத்தனர்.
    Next Story
    ×