என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடந்த 5 ஆண்டுகளில் ஐநா சபையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்
Byமாலை மலர்28 Sep 2019 4:29 PM GMT (Updated: 28 Sep 2019 4:29 PM GMT)
டெல்லி திரும்பிய பிரதமர் மோடி பாஜக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் ஐநா சபையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
அமெரிக்காவில் 7 நாட்கள் அரசுமுறை பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு டெல்லி பாலம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலைய வளாகத்தில் பாஜக தொண்டர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஐ.நா.வில் இந்தியா மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதற்கு 130 கோடி இந்தியர்களே காரணம். அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஹூஸ்டனில் ஹவுடி - மோடி நிகழ்ச்சியானது இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவை வெளிக்காட்டியது. இது மறக்கமுடியாத வரவேற்பு. இந்த சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் நான் தலைவணங்குகிறேன் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
டெல்லி திரும்பிய பிரதமர் மோடியை வரவேற்க ஏராளமான பாஜக தொண்டர்கள் 2 கி.மீ தூரம் வரை விமான நிலையத்தில் குவிந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X