என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்- பாதுகாப்புப்படை வீரர் பலி
Byமாலை மலர்28 Sep 2019 12:01 PM GMT (Updated: 28 Sep 2019 12:01 PM GMT)
காஷ்மீரில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் பலியானார்.
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரம்பான் மாவட்டத்துக்குட்பட்ட பட்டோட்டே பகுதியில் உள்ள முக்கிய சந்தை பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் கையேறி குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்ததையடுத்து பயங்கரவாதிகள் அந்த பகுதியை விட்டு தப்பிச்செல்ல்ல முயன்று அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தனர்.
இதையடுத்து, பயங்கரவாதிகள் நுழைந்த வீட்டை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் அதில் தங்கியிருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர். ஆனால் வீட்டின் உரிமையாளர் விஜய்குமாரை பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக சிறைபிடித்தனர். இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பிணை கைதி விடுவிக்கப்பட்டார். இந்த மோதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் வீரமரணம் அடைந்ததாக ஜம்மு காவல்துறை ஐ.ஜி முகேஷ் சிங் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X