என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் 5 நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு
Byமாலை மலர்28 Sep 2019 10:35 AM GMT (Updated: 28 Sep 2019 10:35 AM GMT)
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்டோபர் முதல் தேதியில் இருந்து விசாரணையை தொடங்க உள்ளது.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய பாஜக அரசு சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து
தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்து வந்த தலைமை நீதிபத் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என பரிந்துரைத்தார்..
இந்நிலையில், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நீதிபதி ரமணா தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.கே.காண்ட், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி ஆர் கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்குவர்.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்டோபர் மாதம் முதல் தேதியில் இருந்து இந்த வழக்குகளை விசாரிக்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X