search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை வெள்ளம்
    X
    மும்பை வெள்ளம்

    மும்பை கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

    மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் பெய்த கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகரத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, புனே மாவட்டத்தில் மழை வெள்ளம் மற்றும் சுவர் இடிந்து விழுந்த விபத்து சம்பவங்கள் காரணமாக 9 வயது சிறுவன் உள்பட இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிப்போர் உள்பட மொத்தம் 10,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
     
    மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்தார். மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன,

    இந்நிலையில், புனேவில் பெய்த கனமழையில் சிக்கி பலியானோரின்4 உடல்கள் இன்று மீட்கப்பட்டன. இதையடுத்து, மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாயமான 7 பேரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×