என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணி வெற்றி
Byமாலை மலர்27 Sep 2019 9:26 AM GMT (Updated: 27 Sep 2019 9:26 AM GMT)
கேரளாவின் பாலா சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் பாலா சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கேரள காங்கிரஸ் (எம்) பிரிவு தலைவர் கே.எம்.மாணி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் அவரது தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில் கே.எம்.மாணியுடன் நெருக்கமாக பணியாற்றிய ஜோஸ் டாம் புலிக்குன்னில் காங்கிரஸ் கூட்டணி சார்பிலும், பா.ஜ.க. சார்பில் கட்சியின் கோட்டயம் மாவட்ட தலைவர் என்.ஹரியும், இடதுசாரிகள் ஆதரவோடு தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் மாணி சி.கப்பென் உள்பட 13 பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்ற பாலா தொகுதியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட மாணி சி.கப்பென், காங்கிரஸ் வேட்பாளர் புலிக்குன்னலை விட 2,943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கேரளாவில் மேலும் 5 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X