search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நில அதிர்வு
    X
    நில அதிர்வு

    டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தானில் லேசான நில அதிர்வு

    டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தானில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
    புதுடெல்லி:

    பாகிஸ்தானின் லாகூருக்கு வடமேற்கே 173 கி.மீ. தூரத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என நிலநடுக்க மையம் இன்று தெரிவித்துள்ளது. அந்த தாக்கம் டெல்லியில்  உணரப்பட்டு உள்ளது.

    டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    சில நொடிகள் நீடித்த இந்த நடுக்கம் மாலை 4:35 மணியளவில் உணரப்பட்டதாக டெல்லியில் பலர் தெரிவித்தனர். டெல்லியில் நாடாளுமன்றம், பிரஸ் கிளப் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது.

    பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தியாவின் பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி மற்றும் டெல்லி புறநகர் பகுதிகளில் லேசான நில அதிர்வு உருவானது. மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×