search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் நொறுங்கிய கார்
    X
    விபத்தில் நொறுங்கிய கார்

    உத்தராகண்ட்: கார் பள்ளத்தில் உருண்ட விபத்தில் 3 பேர் பலி

    உத்தராகண்ட் மாநிலம், தெஹ்ரி மாவட்டத்தில்இன்று 10 பேருடன் சென்ற சொகுசு கார் பள்ளத்தில் உருண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
    டேராடூன்:

    உத்தராகண்ட் மாநிலத்தின் தெஹ்ரி மாவட்டம், கன்சாலி பகுதியை சேர்ந்த 10 பேர் அருகாமையில் உள்ள தானா கன்சாலி என்ற இடத்தை நோக்கி ஒரு சொகுசு காரில் சென்றனர்.

    இன்று பிற்பகல் சுமார் 12 மணியளவில் சாட்டியாரா பகுதியின் வழியாக சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் பக்கவாட்டில் இருந்த மிகப்பெரிய பள்ளத்துக்குள் விழுந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் அந்த காரில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேர் பெல்லேஸ்வர் மற்றும் சாமியாலா பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×