search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு
    X
    வங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு

    வங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

    வங்கி அதிகாரிகள் 26, 27-ந்தேதிகளில் நடத்த இருந்த வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஐந்து நாள் வேலை, வரைமுறையற்ற வேலை நேரத்தை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

    இரண்டு நாட்களுக்குப்பிறகு 28-ந்தேதி நான்காவது சனி, அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை என நான்கு நாட்கள் தொடர்ந்து வங்கி இயங்காத  சூழ்நிலை உருவாகும் நிலை இருந்தது.

    இந்நிலையில் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர்  கூறியிருப்பதால் வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×