search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாரா லேண்ட்ரி
    X
    சாரா லேண்ட்ரி

    சிறுமிகளுக்கு தொல்லை: நித்தியானந்தா மீது வெளிநாட்டு பெண் புகார்

    சிறுமிகளுக்கு தொல்லை கொடுப்பதாக நித்தியானந்தா மீது வெளிநாட்டு பெண் புகார் கூறியுள்ளார்.

    பெங்களூரு:

    கனடா நாட்டில் இருந்து சாரா லேண்ட்ரி என்ற பெயரில் இந்தியா வந்து, கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் ருத்ரகன்னியாக துறவறம் பெற்றார். பின்னர் அவரது பெயர் மாற்றப்பட்டு ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்ப பிரியானந்தா என்று அழைக்கப்பட்டார். அவர் தான் வீடியோ மூலம் நித்தியானந்தாவுக்கு எதிராக புகார் கூறியுள்ளார்.

    நித்தியானந்தா சக்தி மிக்கவர் என்று நம்பி இருந்த நேரத்தில், கடந்த 2017 -ம் ஆண்டு தான் நித்தியானந்தாவால் திருவனந்தபுரத்தில் உள்ள குருகுலத்திற்கு செல்ல வற்புறுத்தப்பட்டது. அதன் பேரில் அவர் திருவனந்தபுரம் சென்றார். அங்குள்ள சிறுவர் சிறுமிகளுக்கு முகனூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்டவற்றில் கணக்கு ஆரம்பிப்பது குறித்தும், அதனை பயன் படுத்துவது எப்படி என்பது குறித்தும், கற்று கொடுக்கும் பணி தனக்கு வழங்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

    நித்தியானந்தா

    அந்த விடுதியில் தங்கி இருந்த சிறுமிகளுக்கு கொடுமைகள் நடந்தது தனக்கு தெரியவந்ததாக என புகார் தெரிவித்துள்ளார்.

    சிறுவர், சிறுமிகள் தனி தனியாக தங்க வைக்கப்பட்டுள்ள அந்த குருகுலத்தில் அதிகாலையில் குச்சியால் அடித்து சிறுவர் சிறுமிகள் வலுக்கட்டாயமாக தூக்கத்தில் இருந்து எழுப்பப்படுவதாகவும், இயற்கை உபாதைகளை கழிக்க கூட அனுமதிப்பதில்லை என்றும் சாரா புகார் தெரிவித்துள்ளார்.

    குருகுல ஆசிரியர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போது தான் அனைவரும் இயற்கை உபாதைகளை கழிக்க செல்ல வேண்டும் என்ற கொடுமையான கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளதாகவும் சாரா தனது வீடியோவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    சிறுவர், சிறுமிகள் ஒருவருக்கொருவர் பேசி கொண்டால் கடுமையான தண்டனை வழங்கப்படுவதாகவும், தனது மகனுக்கு நேர்ந்த கொடுமை குறித்து வினோதினி சங்கர் என்பவர் தனது முகநூலில் பதிவிட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

    13 வயதுள்ள பெங்களூரை சேர்ந்த சிறுமி ஒருவர், 3-வது கண்ணை திறக்க பயிற்சி என்ற பெயரில் கடுமையான கொடுமைகள் நடப்பதால் தன்னை அழைத்து செல்லும் படி கண்ணீர் விட்டு கதறியதாக அந்த வீடியோவில் சாரா தெரிவித்துள்ளார்.

    இந்த கொடுமைகள் குறித்து ரஞ்சிதாவிடம் கூறியதாகவும் அதற்கு அவர் எந்த ஒரு தீர்வும் காணவில்லை என்று கூறியுள்ள சாரா, நித்தியானந்தா தன்னை மூளை சலவை செய்து வைத்திருந்ததாகவும், அந்த சிறுவர் சிறுமிகளை சந்தித்து வந்தபின் அவரிடம் சக்தி இருப்பதாக கூறப்படுவது எல்லாம் பொய் என்பதை உணர்ந்து ஆசிரமத்தில் இருந்து வெளியேறி கனடாவுக்கு சென்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதாக சாரா தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே 2 வருடங்கள் கழித்து நித்தி மீது சாரா தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டு, மதத்தின் மீதான தாக்குதல் என்றும் நித்தியானந்தாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகவும் அவர் இவ்வாறு கூறிவருவதாக நித்தியானந்தாவின் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தன் மீதான இது போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு தான் அஞ்சப்போவதில்லை என்றும் தான் பனங்காட்டு நரி என்றும் நித்தியானந்தா யூடியூப்பில் சூளுரைத்துள்ளார்.

    Next Story
    ×