என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி - கர்நாடக அதிருப்தி எம்.ஏல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு
Byமாலை மலர்23 Sep 2019 11:16 AM GMT (Updated: 23 Sep 2019 12:09 PM GMT)
இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கர்நாடக மாநிலத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.ஏல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.
புதுடெல்லி:
கர்நாடக மாநிலத்தில் முன்னர் குமாரசாமி ஆட்சிக்கு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததால் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்பட 17 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து அவர்கள் 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையில், கர்நாடகா மாநிலத்தில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவேண்டும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 ஏம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஏம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மாநில சட்டசபை சபாநாயகர் பதில் அளிக்க ஆணையிட்டு வழக்கை வரும் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது .
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X