என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஜார்க்கண்டில் அட்டூழியம் - பசுவை கொன்றதாக ஒருவர் அடித்துக் கொலை
ராஞ்சி, செப். 23-
வட மாநிலங்களில் பசுக்கள் கொல்லப்படுவதாக கூறி கும்பல் தாக்குதல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அதில் பலர் உயிரிழந்துள்ளனர். அது போன்ற சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள குந்தி பகுதியில் உள்ள கிராமங்களில் பசுக்கள் கொல்லப்பட்டு இறைச்சி கடத்தப்படுவதாக தகவல் பரவியது.
அத்தகைய சம்பவங்கள் நடைபெறுகிறதா என அப்பகுதி கிராம மக்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் ஜலதங்கா என்ற கிராமத்தில் 3 பேர் பசுவின் உடலுடன் இருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே கும்பலாக சென்ற கிராம மக்கள் பசுவின் உடலுடன் இருந்த 3 பேரை சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று கும்பலிடம் இருந்து 3 பேரையும் மீட்டனர்.
படுகாயம் அடைந்த அவர்கள் அனைவரும் ராஞ்சி யில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனையில் சேர்க் கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
அவரது பெயர் கலாந்தஸ் பர்லா. கோபால் பூர் கிராமத்தை சேர்ந்தவர். இவர் தவிர பாகு கச்சாப் மற்றும் பிலிப் கோரோ ஆகிய 2 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தகவலை டி.ஐ.ஜி. ஏ.வி. கோம்கர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12-க்கும் மேற்பட்ட குற்ற வாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் டி.ஐ.ஜி. கோம்கர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்