என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள்- சென்செக்ஸ் 1000 புள்ளி அதிகரித்தது
Byமாலை மலர்23 Sep 2019 4:32 AM GMT (Updated: 23 Sep 2019 5:25 AM GMT)
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலையில் ஏற்றத்துடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது.
மும்பை:
கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், ஆட்டோமொபைல், உலோகம் உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பான பங்குகள் சரிந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது.
இந்நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தையில் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 291 புள்ளிகளும் உயர்ந்தது. அதன்பின்னர் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 777 புள்ளிகள் உயர்ந்து 38792 புள்ளிகளிலும், நிப்டி 242 புள்ளிகள் உயர்ந்து 11517 புள்ளிகளிலும் வர்த்தகம் தொடர்ந்தது.
இந்திய ரூபாய் மதிப்பு இன்று காலை சற்று வீழ்ச்சி அடைந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தக நிறைவின்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.94 ஆக இருந்தது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது 10 காசுகள் வீழ்ச்சி அடைந்து 71.04 ஆக இருந்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், ஆட்டோமொபைல், உலோகம் உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பான பங்குகள் சரிந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை உள்நாட்டு நிறுவனங்களுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வரிச் சலுகை அறிவித்ததையடுத்து, பங்குச்சந்தைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எழுச்சி ஏற்பட்டது.
மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் 2000 புள்ளிகளுக்குமேல் உயர்ந்து வர்த்தமானது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிப்டி 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
இந்நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தையில் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 291 புள்ளிகளும் உயர்ந்தது. அதன்பின்னர் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 777 புள்ளிகள் உயர்ந்து 38792 புள்ளிகளிலும், நிப்டி 242 புள்ளிகள் உயர்ந்து 11517 புள்ளிகளிலும் வர்த்தகம் தொடர்ந்தது.
இந்திய ரூபாய் மதிப்பு இன்று காலை சற்று வீழ்ச்சி அடைந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தக நிறைவின்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.94 ஆக இருந்தது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது 10 காசுகள் வீழ்ச்சி அடைந்து 71.04 ஆக இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X