என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் விடியவிடிய தாக்குதல்
Byமாலை மலர்21 Sep 2019 9:48 AM GMT (Updated: 21 Sep 2019 9:48 AM GMT)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விடியவிடிய துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியது.
ஜம்மு:
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று காலையில் இருந்து இன்று அதிகாலை வரை பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய கண்காணிப்பு நிலைகளை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
இன்று காலை சுமார் 10 மனியில் இருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர் மற்றும் கேர்னி எல்லைக்கோட்டு பகுதியில் துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்திய வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பாகிஸ்தான் நடத்திய மோர்ட்டார் குண்டு தாக்குதலில் எல்லைப்பகுதியில் உள்ள சில வீடுகள் சேதமடைந்தன. ஆடு, மாடு உள்ளிட்ட 16 கால்நடைகள் உயிரிழந்தன.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஆண்டிலும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதுவரை 2050-க்கும் அதிகமான முறை பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் நமது தரப்பில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று காலையில் இருந்து இன்று அதிகாலை வரை பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய கண்காணிப்பு நிலைகளை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
இன்று காலை சுமார் 10 மனியில் இருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர் மற்றும் கேர்னி எல்லைக்கோட்டு பகுதியில் துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்திய வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பாகிஸ்தான் நடத்திய மோர்ட்டார் குண்டு தாக்குதலில் எல்லைப்பகுதியில் உள்ள சில வீடுகள் சேதமடைந்தன. ஆடு, மாடு உள்ளிட்ட 16 கால்நடைகள் உயிரிழந்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X