search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீதாராமன் ராகுல் காந்தி
    X
    சீதாராமன் ராகுல் காந்தி

    பொருளாதார குழப்ப நிலையை மறைத்து விட முடியாது- நிர்மலா சீதாராமன் நடவடிக்கைக்கு ராகுல் கருத்து

    இந்தியாவின் பொருளாதார குழப்பம் என்ற உண்மை நிலையை மறைத்து விட முடியாது என்று நிர்மலா சீதாராமன் நடவடிக்கை பற்றி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி :

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுமார் ரூ.1½ லட்சம் கோடி அளவுக்கு பெருநிறுவனங்களுக்கான வரிகளை குறைத்து எடுத்த நடவடிக்கை பற்றி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “பங்குச்சந்தையை உயர்த்துவதற்கு, பிரதமர் மோடியின் மோடி நலமா நிகழ்ச்சியையொட்டி இப்படியெல்லாம் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடுவது வியப்பு அளிக்கிறது. ஹூஸ்டன் நிகழ்ச்சிக்காக ரூ.1.4 லட்சம் கோடி ... இதுதான் இதுவரை உலகிலேயே மிகவும் ஆடம்பரமான நிகழ்ச்சி. மோடி நலமா நிகழ்ச்சி, இந்தியாவின் பொருளாதார குழப்பம் என்ற உண்மை நிலையை மறைத்து விட முடியாது” என கூறி உள்ளார்.
    Next Story
    ×