என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என்.ஆர்.சி. அமல்படுத்தப்பட்டால் யோகி ஆதித்யநாத் உ.பி.யை விட்டு வெளியேற வேண்டும் - அகிலேஷ் எச்சரிக்கை
Byமாலை மலர்20 Sep 2019 2:58 PM GMT (Updated: 20 Sep 2019 2:58 PM GMT)
உத்தர பிரதேசத்தில் தேசிய குடியுரிமை பதிவேடு அமல்படுத்தப்பட்டால் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
லக்னோ:
அசாம் மாநிலத்தில் சமீபத்தில் வெளியான தேசிய குடியுரிமைக்கான இறுதிப் பட்டியலில் இருந்து 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே, அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு செய்யப்பட்டது போன்று உத்தர பிரதேசம் உள்பட நாட்டின் பிற மாநிலங்களில் கணக்கெடுப்பு நடைபெற வேண்டும் என உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதன்மூலம் வங்காளதேசம் போன்ற நாடுகள் மட்டுமல்லாமல் பிற பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கி இருக்கும் நபர்களை கண்டுபிடிக்க உதவும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துளார்.
இதுதொடர்பாக, தனது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அகிலேஷ் கூறுகையில், " தேசிய குடிமக்கள் பதிவேடு பொதுமக்கள் மத்தியில் பயத்தை உருவாக்குகிறது. இந்த விவகாரத்தில் மக்களிடையே பிளவை உருவாக்கி அதில் அரசியல் ஆதாயம் ஈட்ட மத்திய அரசு முயல்கிறது. ஒருவேளை தேசிய குடிமக்கள் பதிவேடு இங்கு அமல்படுத்தப்பட்டால் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் முதல் நபராக உத்தர பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும். ஏனென்றால் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாநிலம் உத்தரகாண்ட் ஆகும்” என காட்டமாக தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X