என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எதிரெதிர் துருவங்களான எடியூரப்பா-சித்தராமையா ஒரே மேடையில் சந்திப்பு
Byமாலை மலர்20 Sep 2019 2:32 AM GMT (Updated: 20 Sep 2019 2:32 AM GMT)
எதிரெதிர் துருவங்களாக உள்ள எடியூரப்பாவும், சித்தராமையாவும் ஒரே மேடையில் சந்தித்து பேசினர். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு :
கர்நாடக தொழில்துறை மற்றும் தலித் தொழில்முனைவோர் சங்கம் சார்பில் அரசு வழங்கும் சலுகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பெங்களூரு வசந்த்நகரில் உள்ள அம்பேத்கர் பவனில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நிகழ்ச்சிக்கு வந்தார்.
அப்போது மேடையில் இருக்கையில் அமர்ந்திருந்த எடியூரப்பா எழுந்து நின்று, சித்தராமையாவை வரவேற்று இருக்கையில் அமருமாறு கூறினார். சித்தராமையா ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு எடியூரப்பா நிதி ஒதுக்கீட்டை குறைத்து வருகிறார். மேலும் பல்வேறு திட்ட பணிகளில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக கூறி விசாரணைக்கும் முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை என்று கூறி முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, எடியூரப்பாவை கடுமையாக குறை கூறி வருகிறார். சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் தான் விதான சவுதாவில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இவ்வாறு கர்நாடக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் எடியூரப்பாவும், சித்தராமையாவும் நேற்று ஒரே மேடையில் தோன்றியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் இது கர்நாடக அரசியலில் சிறிது பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அரசியல் விமர்சகர்கள், தங்களுக்கு உரிய பாணியில் கருத்துகளை கூறி வருகிறார்கள்.
கர்நாடக தொழில்துறை மற்றும் தலித் தொழில்முனைவோர் சங்கம் சார்பில் அரசு வழங்கும் சலுகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பெங்களூரு வசந்த்நகரில் உள்ள அம்பேத்கர் பவனில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நிகழ்ச்சிக்கு வந்தார்.
அப்போது மேடையில் இருக்கையில் அமர்ந்திருந்த எடியூரப்பா எழுந்து நின்று, சித்தராமையாவை வரவேற்று இருக்கையில் அமருமாறு கூறினார். சித்தராமையா ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு எடியூரப்பா நிதி ஒதுக்கீட்டை குறைத்து வருகிறார். மேலும் பல்வேறு திட்ட பணிகளில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக கூறி விசாரணைக்கும் முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை என்று கூறி முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, எடியூரப்பாவை கடுமையாக குறை கூறி வருகிறார். சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் தான் விதான சவுதாவில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இவ்வாறு கர்நாடக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் எடியூரப்பாவும், சித்தராமையாவும் நேற்று ஒரே மேடையில் தோன்றியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் இது கர்நாடக அரசியலில் சிறிது பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அரசியல் விமர்சகர்கள், தங்களுக்கு உரிய பாணியில் கருத்துகளை கூறி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X