search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    மகாராஷ்டிராவில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார் மோடி

    மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
    நாசிக்:

    மகாராஷ்டிர மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 9-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, அங்கு அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது. நாசிக்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பிரச்சாரத்தை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.

    மகாராஷ்டிர சட்டசபையில் 288 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது பாஜக, சிவசேனா கூட்டணி அரசு மெஜாரிட்டியுடன் ஆட்சியில் உள்ளது. வரும் தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையவில்லை.

    இதேபோல் பாஜக ஆட்சியில் உள்ள ஜார்க்கண்ட், அரியானா மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அந்த மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×