என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிற மொழி கற்க வேண்டுமெனில் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என கூறினேன் - சர்ச்சைக்கு அமித் ஷா விளக்கம்
Byமாலை மலர்18 Sep 2019 12:33 PM GMT (Updated: 18 Sep 2019 12:33 PM GMT)
வேறு ஒரு மொழி கற்க வேண்டும் எனில் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என்றுதான் கூறினேன் என சர்ச்சைக்கு உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தி மொழி தினத்தையொட்டி மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. தேசிய தலைவருமான அமித் ஷா வாழ்த்துச் செய்தி வெளியிட்டு இருந்தார்.
அதில், இந்தி நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டும். இந்தியால் தான் நாட்டை ஒருங்கிணைக்க முடியும். இந்தியை வைத்துதான் வெளிநாடுகளில் இந்தியாவை அடையாளம் காண முடியும் என்று கூறியிருந்தார். அவரது கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், இந்தி விவகாரம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில், எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.
நான் எப்போதும் சொல்வது போல இந்திய மொழிகளை வலிமைப்படுத்த வேண்டும். தனது தாய்மொழியில் படிக்கும் போதுதான் ஒரு குழந்தையால் நன்றாக படிக்க முடியும்.
தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றுதான் கூறினேன் என விளக்கம் அளித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X