என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான் எந்த கட்சியிலும் சேரவில்லை: நடிகை ஊர்மிளா
Byமாலை மலர்18 Sep 2019 2:13 AM GMT (Updated: 18 Sep 2019 2:13 AM GMT)
‘நான் எந்த கட்சியிலும் சேரவில்லை’ என நடிகை ஊர்மிளா மடோங்கர் விளக்கம் அளித்து உள்ளார்.
மும்பை :
இந்தியில் வெளியான ‘ரங்கீலா’ படம் மூலம் புகழ்பெற்றவர் பிரபல நடிகை ஊர்மிளா மடோங்கர். இவர் தமிழில் கமல்ஹாசனுடன் இந்தியன் படத்தில் நடித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கிய சமயத்தில் இவர் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் வடமும்பை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். ஊர்மிளா மடோங்கரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் கோபால் ஷெட்டி சுமார் 4½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவர் பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகும் ஒரு வாரத்துக்கு முன்பு தனக்காக தேர்தல் பணியாற்றிய காங்கிரஸ் நிர்வாகிகள் மீது புகார் கடிதம் ஒன்றை மாநில தலைமைக்கு எழுதி இருந்தார். அந்த கடிதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன்பிறகு கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்த ஊர்மிளா மடோங்கர் கடந்த 10-ந் தேதி காங்கிரசில் இருந்து விலகினார்.
இந்தநிலையில் அவர் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான மிலிந்த் நர்வேக்கருடன் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் சிவசேனாவில் சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை நடிகை ஊர்மிளா மடோங்கர் மறுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. எனவே இதுபோன்ற தகவல்களை ஊடகங்கள் பரப்ப வேண்டாம். எனக்கு எதிராக இதுபோன்ற தகவல்களை கூறுவது நியாயமற்றது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தியில் வெளியான ‘ரங்கீலா’ படம் மூலம் புகழ்பெற்றவர் பிரபல நடிகை ஊர்மிளா மடோங்கர். இவர் தமிழில் கமல்ஹாசனுடன் இந்தியன் படத்தில் நடித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கிய சமயத்தில் இவர் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் காங்கிரஸ் கட்சி சார்பில் வடமும்பை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். ஊர்மிளா மடோங்கரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் கோபால் ஷெட்டி சுமார் 4½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவர் பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகும் ஒரு வாரத்துக்கு முன்பு தனக்காக தேர்தல் பணியாற்றிய காங்கிரஸ் நிர்வாகிகள் மீது புகார் கடிதம் ஒன்றை மாநில தலைமைக்கு எழுதி இருந்தார். அந்த கடிதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன்பிறகு கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்த ஊர்மிளா மடோங்கர் கடந்த 10-ந் தேதி காங்கிரசில் இருந்து விலகினார்.
இந்தநிலையில் அவர் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான மிலிந்த் நர்வேக்கருடன் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் சிவசேனாவில் சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை நடிகை ஊர்மிளா மடோங்கர் மறுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. எனவே இதுபோன்ற தகவல்களை ஊடகங்கள் பரப்ப வேண்டாம். எனக்கு எதிராக இதுபோன்ற தகவல்களை கூறுவது நியாயமற்றது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X