என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்க்கண்டில் மின்னல் தாக்கி 6 பேர் பலி
Byமாலை மலர்17 Sep 2019 4:59 PM GMT (Updated: 17 Sep 2019 4:59 PM GMT)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 14 வயது சிறுவன் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்டில் மின்னல் தாக்கியதில் 14 வயது சிறுவன் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், சத்பர்வா கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 14 வயது சிறுவன் பலியானான். செயின்பூர் கிராமத்தில் விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி பலியானார். சராய்தி கிராமத்தில் 50 வயது பெரியவரும் பலியானார்.
ஜார்கடா, டும்ரி மற்றும் சரையா செதுதி கிராமங்களில் தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மின்னல் தாக்கி பலியானோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X