என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
74 வயது இளைஞனாக உணர்கிறேன் - பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி
Byமாலை மலர்16 Sep 2019 10:57 PM GMT (Updated: 16 Sep 2019 10:57 PM GMT)
என் நண்பர்கள், கட்சியை சேர்ந்த சக தலைவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளை எனது குடும்பத்தினர் என்னிடம் தெரிவித்ததற்கு அனைவருக்கும் நன்றி என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு நேற்று 74-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி அவருக்கு மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் ப.சிதம்பரம் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
‘பின்வருபவற்றை என் சார்பாக டுவிட்டரில் பகிருமாறு எனது குடும்பத்தினரை கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் வெளியிட்டு இருக்கும் அந்த செய்தியில், ‘என் நண்பர்கள், கட்சியை சேர்ந்த சக தலைவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளை எனது குடும்பத்தினர் என்னிடம் தெரிவித்தனர். எனக்கு 74 வயதாகிறது என்று நினைவூட்டப்பட்டேன். உண்மையில், 74 வயது இளைஞர் என்றுதான் நான் உணர்கிறேன். எனது பலம் அதிகரிக்கிறது. அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதைப்போல நாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்தே தனது எண்ணம் எல்லாம் இருப்பதாக மற்றொரு பதிவில் அவர் கவலை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘வெறும் ஒரு புள்ளிவிவரமே ஒட்டுமொத்த பொருளாதார நிலையையும் தெரிவித்து உள்ளது. அதாவது ஆகஸ்டு மாத ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் மைனஸ் 6.05 ஆக இருக்கிறது. ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 20 சதவீதத்தை எட்டாத எந்த நாடும் 8 சதவீத ஜி.டி.பி.யை எட்டியதில்லை. இந்த நாட்டை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’ என்று தெரிவித்து இருந்தார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு நேற்று 74-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி அவருக்கு மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் ப.சிதம்பரம் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
‘பின்வருபவற்றை என் சார்பாக டுவிட்டரில் பகிருமாறு எனது குடும்பத்தினரை கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் வெளியிட்டு இருக்கும் அந்த செய்தியில், ‘என் நண்பர்கள், கட்சியை சேர்ந்த சக தலைவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளை எனது குடும்பத்தினர் என்னிடம் தெரிவித்தனர். எனக்கு 74 வயதாகிறது என்று நினைவூட்டப்பட்டேன். உண்மையில், 74 வயது இளைஞர் என்றுதான் நான் உணர்கிறேன். எனது பலம் அதிகரிக்கிறது. அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதைப்போல நாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்தே தனது எண்ணம் எல்லாம் இருப்பதாக மற்றொரு பதிவில் அவர் கவலை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘வெறும் ஒரு புள்ளிவிவரமே ஒட்டுமொத்த பொருளாதார நிலையையும் தெரிவித்து உள்ளது. அதாவது ஆகஸ்டு மாத ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் மைனஸ் 6.05 ஆக இருக்கிறது. ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 20 சதவீதத்தை எட்டாத எந்த நாடும் 8 சதவீத ஜி.டி.பி.யை எட்டியதில்லை. இந்த நாட்டை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’ என்று தெரிவித்து இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X