என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் அல்ல: ராகுல் காந்தி
Byமாலை மலர்16 Sep 2019 4:15 PM GMT (Updated: 16 Sep 2019 4:15 PM GMT)
பல மொழிகள் இருப்பதால் இந்தியா ஒன்றும் பலவீனமான நாடு இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தி மொழி தினத்தையொட்டி மத்திய உள்துறை மந்திரியும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவருமான அமித் ஷா கடந்த 14-ம் தேதி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "நாட்டின் தேசிய மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியால் தான் நாட்டை ஒருங்கிணைக்க முடியும். இந்தியை வைத்துதான் வெளி நாடுகளில் இந்தியாவை அடையாளம் காண முடியும்" என்று கூறி இருந்தார்.
அமித் ஷா-வின் இந்த கருத்து தென் மாநில அரசியல் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமித் ஷா தனது கருத்தை திரும்ப பெற வேண்டுமென கண்டனக் குரல்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒரியா, மராத்தி, கன்னடம், இந்தி, தமிழ், வங்காளம், உருது, பஞ்சாபி, கொங்கனி, மலையாளம், தெலுங்கு, அசாமி, போடோ, டோக்ரி , மைதிலி, நேபாளி, சமஸ்கிருதம், காஷ்மீரி, சிந்து, சந்தளி, மணிப்பூரி என பல மொழிகள் உள்ளது. பல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனம் இல்லை’ என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X