search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிகள் போராட்டம்
    X
    மாணவிகள் போராட்டம்

    தெலுங்கானாவில் மகளிர் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து மாணவிகள் போராட்டம்

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள புனித பிரான்சிஸ் மகளிர் கல்லூரியில் முழங்காலை மறைக்கும் வகையில் உள்ள குர்தாக்களை மட்டுமே அணிய வேண்டும் என கல்லூரி நிர்வாகம்  மாணவிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    இதையடுத்து கல்லூரியின் இந்த புதிய ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கல்லூரி மாணவிகள் நிர்வாகத்துக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாணவிகள் போராட்டம்

    இந்த பதகைகளில், ‘say no to long kurti',  'My Kurti My Choice' போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த உத்தரவை கல்லூரி நிர்வாகம் திரும்பப் பெறக்கோரி மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
    Next Story
    ×