என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி 21 பேரை கொன்றது - பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு
Byமாலை மலர்16 Sep 2019 3:05 AM GMT (Updated: 16 Sep 2019 3:05 AM GMT)
பாகிஸ்தான் இந்த ஆண்டு இதுவரை 2,050 முறை சண்டை நிறுத்தத்தை மீறி நடத்தி உள்ள தாக்குதல்களில் 21 இந்தியர்கள் பலியாகி உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டி உள்ளார்.
புதுடெல்லி:
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதிகளில், 2003-ம் ஆண்டு போடப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடாவடி தாக்குதலில் ஈடுபடுவதை பாகிஸ்தான் வழக்கமாக்கி கொண்டுள்ளது.
இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், “ எல்லை கட்டுப்பாட்டு கோடு, சர்வதேச எல்லையில், 2003-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும்; அமைதியையும், சமாதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தனது படைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என பல முறை இந்தியா வலியுறுத்தி உள்ளது” என குறிப்பிட்டார்.
மேலும், “இந்திய படைகள் அதிகபட்ச கட்டுப்பாட்டை கொண்டுள்ளன. அத்துமீறிய தாக்குதல்களுக்கும், பயங்கரவாதிகள் எல்லை தாண்டி ஊடுருவ முயற்சிப்பதற்கும் அவை பதிலடி கொடுக்கின்றன” எனவும் அவர் கூறினார்.
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதிகளில், 2003-ம் ஆண்டு போடப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடாவடி தாக்குதலில் ஈடுபடுவதை பாகிஸ்தான் வழக்கமாக்கி கொண்டுள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு இதுவரை பாகிஸ்தான் 2,050 முறை சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல்கள் நடத்தி உள்ளது. இந்த தாக்குதல்களில் 21 இந்தியர்கள் பலியாகி உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.
இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், “ எல்லை கட்டுப்பாட்டு கோடு, சர்வதேச எல்லையில், 2003-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும்; அமைதியையும், சமாதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தனது படைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என பல முறை இந்தியா வலியுறுத்தி உள்ளது” என குறிப்பிட்டார்.
மேலும், “இந்திய படைகள் அதிகபட்ச கட்டுப்பாட்டை கொண்டுள்ளன. அத்துமீறிய தாக்குதல்களுக்கும், பயங்கரவாதிகள் எல்லை தாண்டி ஊடுருவ முயற்சிப்பதற்கும் அவை பதிலடி கொடுக்கின்றன” எனவும் அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X