என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசியல் சட்டத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம் - மம்தா பானர்ஜி அழைப்பு
Byமாலை மலர்15 Sep 2019 9:37 PM GMT (Updated: 15 Sep 2019 9:37 PM GMT)
நாட்டில் சூப்பர் அவசரநிலை நிலவுகிறது. அரசியல் சட்டத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம் என்று மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
கொல்கத்தா:
ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ந் தேதி, சர்வதேச ஜனநாயக தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சர்வதேச ஜனநாயக தினத்தில், நமது நாடு எதன் அடிப்படையில் நிறுவப்பட்டதோ, அந்த ஜனநாயக கோட்பாடுகளை பாதுகாக்க நாம் மீண்டும் ஒருமுறை உறுதி ஏற்றுக்கொள்வோம்.
நமது ஜனநாயகம், மக்களின் உரிமைகளுக்கும், சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. சூப்பர் அவசரநிலை நிலவும் இந்த காலத்தில், அந்த உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.
குடிமக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்று எல்லா அரசுகளையும் வற்புறுத்த இந்த நாளை ஒரு வாய்ப்பாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜனநாயகம் என்பது மக்களுக்கானது, ஜனநாயகம் என்பது அனைவரையும் உள்ளடக்கியது, எல்லோருக்கும் சம அந்தஸ்து அளிக்கக்கூடியது என்று நினைவுபடுத்த இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வோம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ந் தேதி, சர்வதேச ஜனநாயக தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சர்வதேச ஜனநாயக தினத்தில், நமது நாடு எதன் அடிப்படையில் நிறுவப்பட்டதோ, அந்த ஜனநாயக கோட்பாடுகளை பாதுகாக்க நாம் மீண்டும் ஒருமுறை உறுதி ஏற்றுக்கொள்வோம்.
நமது ஜனநாயகம், மக்களின் உரிமைகளுக்கும், சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. சூப்பர் அவசரநிலை நிலவும் இந்த காலத்தில், அந்த உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.
குடிமக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்று எல்லா அரசுகளையும் வற்புறுத்த இந்த நாளை ஒரு வாய்ப்பாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜனநாயகம் என்பது மக்களுக்கானது, ஜனநாயகம் என்பது அனைவரையும் உள்ளடக்கியது, எல்லோருக்கும் சம அந்தஸ்து அளிக்கக்கூடியது என்று நினைவுபடுத்த இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வோம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X