என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீதிபதிகள் இடமாற்றம் குறித்து சுப்ரீம் கோர்ட் விளக்கம்
Byமாலை மலர்13 Sep 2019 12:05 AM GMT (Updated: 13 Sep 2019 12:05 AM GMT)
ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் இடமாற்றம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நேற்று விளக்கம் அளித்தது.
புதுடெல்லி:
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில்ரமானியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு (கொலிஜியம்) பரிந்துரை செய்தது. அதை அவர் ஏற்க மறுப்பதால், இந்த விவகாரம் பரபரப்பை உருவாக்கி உள்ளது.
இந்நிலையில், தஹில்ரமானியின் பெயரைக் குறிப்பிடாமல், நீதிபதிகள் இடமாற்றம் குறித்து சுப்ரீம் கோர்ட் நேற்று விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட் செயலாளர் சஞ்சீவ் எஸ்.கல்கோங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பல்வேறு ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் இடமாற்றம் தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. தெளிவான, ஏற்கத்தக்க காரணங்கள் அடிப்படையில்தான், ஒவ்வொரு இடமாற்றமும் பரிந்துரை செய்யப்படுகிறது.
நீதித்துறையின் நலன் கருதி, இடமாற்றத்துக்கான காரணங்கள் வெளியிடப்படுவது இல்லை. ஆனால், தேவை ஏற்பட்டால், காரணங்களை வெளியில் சொல்ல சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் தயங்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில்ரமானியை மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு (கொலிஜியம்) பரிந்துரை செய்தது. அதை அவர் ஏற்க மறுப்பதால், இந்த விவகாரம் பரபரப்பை உருவாக்கி உள்ளது.
இந்நிலையில், தஹில்ரமானியின் பெயரைக் குறிப்பிடாமல், நீதிபதிகள் இடமாற்றம் குறித்து சுப்ரீம் கோர்ட் நேற்று விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட் செயலாளர் சஞ்சீவ் எஸ்.கல்கோங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பல்வேறு ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் இடமாற்றம் தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. தெளிவான, ஏற்கத்தக்க காரணங்கள் அடிப்படையில்தான், ஒவ்வொரு இடமாற்றமும் பரிந்துரை செய்யப்படுகிறது.
நீதித்துறையின் நலன் கருதி, இடமாற்றத்துக்கான காரணங்கள் வெளியிடப்படுவது இல்லை. ஆனால், தேவை ஏற்பட்டால், காரணங்களை வெளியில் சொல்ல சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் தயங்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X