என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நல்லது நடந்தால் மோடினாமிக்ஸ்.. கெட்டது நடந்தால் நிர்மலானாமிக்ஸ்.. -சிங்வி தாக்கு
Byமாலை மலர்11 Sep 2019 10:01 AM GMT (Updated: 11 Sep 2019 10:01 AM GMT)
ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அளித்த விளக்கத்தினை தாக்கி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கருத்து தெரிவித்துள்ளார்.
புது டெல்லி:
நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சியும் ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.
மக்கள் சொந்தமாக கார் வாங்குவதற்கு பதிலாக இதுபோன்ற கார்களில் பயணிக்க விரும்புகிறார்கள்’ என கூறியிருந்தார். நிர்மலா சீதாராமனின் இந்த விளக்கம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சிங்வி கூறுகையில், ‘பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்கள் 50 மில்லியனை தாண்டிவிட்டனர்.
பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களை தாண்டிவிடும் என்றால் எப்படி?. இளைஞர்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. இதற்கும் எதிர்கட்சிதான் காரணம் என கூறுவீர்களா? ஊபர், ஓலாதான் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டார்களா?.
எது நல்லது நடந்தாலும், எங்களால் செய்யப்பட்டுள்ளது (மோடினாமிக்ஸ்). எது கெட்டது நடந்தாலும், மற்றவர்களால் (நிர்மலானாமிக்ஸ்) செய்யப்பட்டது. பிறகு, மக்கள் உங்களை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? (பப்ளிக்னாமிக்ஸ்)’ என பதிவிட்டுள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சியும் ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.
மேலும், ஆட்டோமொபைல் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய தேக்கம் உருவாவதற்கு ஊபர், ஓலா நிறுவனங்கள் காரணமாக இருக்கின்றன.
மக்கள் சொந்தமாக கார் வாங்குவதற்கு பதிலாக இதுபோன்ற கார்களில் பயணிக்க விரும்புகிறார்கள்’ என கூறியிருந்தார். நிர்மலா சீதாராமனின் இந்த விளக்கம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சிங்வி கூறுகையில், ‘பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்கள் 50 மில்லியனை தாண்டிவிட்டனர்.
பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களை தாண்டிவிடும் என்றால் எப்படி?. இளைஞர்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. இதற்கும் எதிர்கட்சிதான் காரணம் என கூறுவீர்களா? ஊபர், ஓலாதான் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டார்களா?.
எது நல்லது நடந்தாலும், எங்களால் செய்யப்பட்டுள்ளது (மோடினாமிக்ஸ்). எது கெட்டது நடந்தாலும், மற்றவர்களால் (நிர்மலானாமிக்ஸ்) செய்யப்பட்டது. பிறகு, மக்கள் உங்களை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? (பப்ளிக்னாமிக்ஸ்)’ என பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X