search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் (கோப்பு படம்)
    X
    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் (கோப்பு படம்)

    மக்களை அச்சுறுத்தும் போஸ்டர்கள்- ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 8 பேர் கைது

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சோப்பூர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைப்பதற்காக ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகளை கண்டறிந்து அவர்களை களையெடுக்கும் பணியில் ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதேபோல் பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்வோரையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்பட்ட 8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் போஸ்டர்களை விநியோகிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போஸ்டர் அச்சடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர்கள் மற்றும் பிற சாதனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    சோப்பூரில் பழ வியாபாரி வீட்டிற்குள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இரண்டு நாட்களுக்கு பிறகு, இந்த கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    கைது செய்யப்பட்ட 8 பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் என தெரியவந்துள்ளது.
    Next Story
    ×